Monday, April 5, 2010

உலகை மாற்ற உணவை மாற்று

உலகை மாற்ற உணவை மாற்று
-திருமதி ரதி லோகநாதன்


இன்றைய உலகம் அழிவுப்பாதையில் போய்க்கொண்டிருக்கிறது.நாளுக்கு நாள் குற்றங்களும், இயற்கை சீற்றங்களும் பெருகிக் கொண்டே இருக்கின்றன. இதற்கெல்லாம் என்ன காரணம்? மனித குலம் எங்கோ பெரும் தவறு செய்துகொண்டிருக்கிறது. என்ன தவறு? போர், நீதி நூல்கள், காவல்துறை, நீதிமன்றம் ஆகியவற்றால் நீதியை நிலைநாட்ட முடியவில்லை. போரினால் அழிவே அதிகம். நீதி நூல்களால் உலகம் திருந்தும் என்றால், திருக்குறள் எழுதியபோதே, உலகம் திருந்தியிருக்கும். அதுவும் திருந்தவில்லை. காவல்துறையும், நீதிமன்றமும் துவங்கினால் உலகம் திருந்தியிருக்கும் என்றால், இப்போது ஒரு குற்றமும் நடக்கக் கூடாது. ஆனால் அதுவும் நடக்க வில்லை. வெறும் சட்டத்தினாலும், கட்டுப்பாடுகளினாலும் உலகை திருத்த முடியாது. சரி, உலகை மாற்ற என்ன செய்யவேண்டும்.