Saturday, August 28, 2010

கதம்ப வண்டு

ஒரு நாள் திடீரென தீயணைப்பு வீரர்கள் எங்கள் அலுவலவகத்திற்கு வந்து நின்றனர். என்னது எதுக்கென்று விசாரித்ததில், கதம்ப வண்டுகளை அழிக்க வந்தவர்கள் என்பது தெரிந்தது. அதென்னப்பா கதம்ப வண்டு? விசாரித்ததில் அதிர்ச்சிகரமான விசயங்கள் தெரியவந்தன.

Wednesday, August 11, 2010

ராஜராஜனின் வெற்றிகள்

வலைப்பூக்களை மேய்ந்து கொண்டிருந்தபோது இராஜராஜ சோழனின் வெற்றிகள் பற்றிய ஒரு கட்டுரையை படிக்க நேர்ந்தது. (கட்டுரையை படிக்க: http://festival2009.ponniyinselvan.in/souvenir/rajarajarin-vetrigal-dr-nalini.html ) ஒரு மன்னனின் வெற்றி என்றால், எத்தனை நாடுகளை பிடித்தான்? எத்தனை போரில் வென்றான்? என்று ஒரு கணக்கு பட்டியல் தான் இருக்கும் என்று நினைத்து படித்தேன். ஆனால் ராஜராஜனின் வெற்றி அவன் தன்னுடைய நாட்டு மக்கள் மனங்களில் இடம் பிடித்ததுதான் என்று கட்டுரையாளர் குறிப்பிடுகிறார்.

ரசமா? சாம்பாரா?

மனைவி : ஏங்க! இன்னிக்கு ரசம் வைக்கவா? சாம்பார் வைக்கவா?
கணவன்: எதையாவது முதல்ல வை. அப்புறம் பேர் வச்சுக்கலாம்.
மனைவி: ?!?!?

நன்றி: திரு சரவணன்