Monday, March 23, 2009

"மருந்தே உணவு; உணவே மருந்து"

உங்களுக்கு நோய் ஏற்படும்போது மருத்துவரைப் பார்க்கிறீர்கள். மருந்து கொடுக்கிறார். நோய் குணமாகி விடுகிறது. இப்படி இருக்கும் வரை சரி.

நோய் உருவாகிறது. மருத்துவர் மருந்து கொடுக்கிறார். நோய் தற்காலிகமாக குணமாகிறது. தொடர்ந்து மருந்து சாப்பிடுகிறீர்கள். நோய் தீர்ந்தபாடில்லை. நீண்ட காலம் மருந்து எடுக்கிறீர்கள். மருந்துகளால் வேறு உபாதைகள் வருகின்றன. அதற்கும் வேறு மருந்துகள் எடுக்கிறீர்கள். மருந்துகளின்றி உங்களால் வாழ முடியாத நாள் ஒன்று வந்துவிடும். அப்போதும் விசுவாசத்தோடு அதே மருந்துகளையும் கொஞ்சமும் மாற்றமின்றி அதே உணவுகளையும் உண்டு வருகின்றீர்கள்.


சித்தா, ஹோமியோ பக்கம் போவதற்கு பயம். நோய் தீர்வதற்கு நீண்ட காலம் தேவைப்படும் என்று நீங்களே ஒரு முடிவுக்கு வந்து விட்டீர்கள். அறுவை சிகிச்சை, விபத்து காயங்கள் மற்றும் இதய நோய்கள் போன்றவற்றுக்கு ஆங்கில மருத்துவத்திற்கு ஈடு இல்லைதான். ஆனால், சர்க்கரை நோய்? ஆங்கில மருத்துவத்தால் குணப்படுத்தவே முடியாத ஆனால் எல்லோருக்கும் இருக்கக் கூடிய வியாதி என்றால் இந்த நீரிழிவு நோய்தான். எப்போதாவது மாற்று மருத்துவத்தை நாடியுள்ளீர்களா? இந்த நோயை, வெறும் உணவுக் கட்டுப்பாட்டால், ஒரு மாதத்தில் குணமாக்க முடியும் என்று ஒரு ஆள் அடித்துக் கூறுகிறார். நம்ப முடிகிறதா? சைனஸ் தொல்லையா, கவலையை விடுங்கள், இரண்டு மாதத்தில் குணமாக்குகிறேன் என்கிறார் அவர்.

இத்தனையும் வெறும் உணவுக்கட்டுப்பாட்டால் மக்களே! எந்த மருந்தும் தராமல், உணவையே மருந்தாக்கி சரி செய்கிறேன் என்கிறார்.

(அட! இவர் இன்னொன்று சொல்கிறார். வெறும் இயற்கை உணவு மட்டும் உண்டு வாழ்ந்தால் பல் துலக்க வேண்டாமாம்)

நீங்கள் உடனே, வாங்கிப் படிக்க வேண்டிய புத்தகம் மூ.ஆ.அப்பன் அவர்கள் (மேலே குறிப்பிட்ட 'அந்த ஆள்') எழுதிய "இயற்கை உணவே நோய் தீர்க்கும் மருந்து" என்னும் நூல். வெறும் தேங்காய் பழத்தை மட்டுமே உண்டு வாழ்ந்தவர் அவருடைய அண்ணன். தன் மகனுக்கு வயிற்றில் அடிபட்டு காயம் ஏற்பட்ட போது, வெறும் தேங்காய் எண்ணெய், தேன் கொண்டு குணமாக்கியவர் தான் அவரது அண்ணன் திருமிகு ராமகிருஷ்ணன் அய்யா அவர்கள்.

இவருடைய அடிப்படை கொள்கை:
இயற்கையாக விளைந்த பழங்கள் மட்டுமே உண்ண வேண்டும். இதுவே ஒவ்வொரு மனிதனுக்குமான ஏற்ற உணவு. எல்லோரும் அதையே உண்ண வேண்டும்.

“ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் புரட்சித்தலைவர் சொல்வாரே “நோயில்லா உலகத்தை உருவாக்குவதே என் இலட்சியம்” என்று. இது சாத்தியம் என்கிறார் இந்த மதுரைக்காரர்.

இவருடைய வேண்டுதல்:

• முடிந்தவரை பழங்களே உண்ணுங்கள்.(தேங்காய் உண்ணலாம்).
• இல்லையேல் வேகவைக்காத பருப்புகள், கொட்டைகள் சாப்பிடுங்கள்.
• முடியவில்லை எனில் உப்பில்லாத வேகவைத்தவை. அதுவும் முடியவில்லை எனில் “உப்பு குறைந்த உணவுகள்” உண்ண வேண்டும்.
• அதிகம் தண்ணீர் அருந்த வேண்டும்.
• கட்டாயமாக பொரித்த, அசைவ உணவுகளை உண்ணாதீர்கள். கட்டாயமாக வெள்ளைச் சீனி சேர்க்காதீர்கள். கருப்பட்டி அல்லது நாட்டுச் சர்க்கரை நல்லது.

வெறும் உணவினால் நோய் குணமானால் நல்லதுதானே!

நன்மைகள்:
நோய் உள்ளவர்கள் இயற்கை உணவை உண்ணலாம். நோயே வராதவர்கள் எதற்காக உண்ண வேண்டும். இனிமேல் நோய் வராமல் இருக்கவும், கீழ்க்காணும் நன்மைகள் கிடைக்கவும் எல்லோரும் இயற்கை உணவை உண்ண வேண்டும்.

1. ஊளைச் சதை முற்றிலும் மறைந்து விடும். நீங்கள் அழகான வடிவம் பெறுவீர்கள். ஊளைச் சதைக்கு அழகு நிலைய மருத்துவமனைக்கு செல்ல வேண்டியதில்லை. கூடவே, இதனால் தோன்றும் மூட்டுவலி, இடுப்பு வலி போன்றனவும் மறைந்து விடும்.

2. மலச்சிக்கல் வரவே வராது. மலச்சிக்கல் தான் பல நோய்களுக்கு காரணம்.

3. தோல் நன்றாக பொலிவு பெறும். தோல் கருப்படைதல், புள்ளிகள் தோன்றுதல் போன்றன இருக்காது.

4. நன்றாக பசி எடுக்கும். வளர்சிதை மாற்றம் நன்றாக இருக்கும். உடல் நீங்கள் சொன்னதுபோல் கேட்கும். இளமைத் தோற்றம் மாறாது.(ஆமாம் மக்களே! தோல் சுருக்கம், கண்களுக்கு கீழ் கருவளையம் போன்றன தோன்றாது. நானே கண்கூடாக கண்டிருக்கின்றேன்)

5. எப்போதுமே சுறுசுறுப்பாக இருப்பீர்கள். மனம் அமைதியாக இருக்கும். பதற்றம் தோன்றாது.

6. முடி நரைக்காது. முடி உதிராது.

வேறென்னய்யா வேண்டும்.
உலகப் புகழ் பெற்ற சீன மருத்துவத்தின் கொள்கைகளை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். (கூடவே ஆங்கில மருத்துவத்துவத்தையும், மருத்துவமனைகளையும் செலவுகளையும் எண்ணிப்பாருங்கள்)

ஒரு மருத்துவர் நோயாளியின் நோயை முதலில் உணவின் மூலமே குணப்படுத்த வேண்டும். அது முடியாமல் போகும் போது (அல்லது உணவால் குணப்படுத்த இயலாத நோய் என்று தெரிந்தால்) அக்கு பிரஷர், அக்கு பங்சர், தொடுதல், ஒத்தடம் கொடுத்தல், மசாஜ் செய்தல் முறைகளில் நோயை குணமாக்கிட வேண்டும். இவற்றினாலெல்லாம் முடியாத நிலையில்தான் மருந்து கொடுக்க வேண்டும்.

குறள் சொல்வதையும் கொஞ்சம் கேளுங்கள்.
“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்”

உணவு செரித்த பின்பு உண்டால், உடலுக்கு மருந்து தேவையில்லை.

4 comments:

Unknown said...

congratulations for ur action to start tamil blogspot
pls send tamil software

S/o sreenivasan G cbe HPO

E-mail: s.dineshbalaji@gmail.com

priya said...

hello sir this website is very useful for me... ineed food time table and uses of berikkai and sembaruthi... my web ID is "rajapriya.pappu@gmail.com"

VIJI said...

Useful information anna....

Magalakshmi said...

அருமையான தகவல்